Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களுக்கு கால பூஜைக்கான ... கடையம் கோயில்களில் 17ம் தேதி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பராமாயணத்தில் மனமாற்றம் வந்தது கைகேயிக்குத்தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2012
10:05

புதுச்சேரி : கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம் வந்தது கைகேயிக்குதான் என, கம்பன் கழகம் சார்பில் நடந்த மேல் முறையீட்டு பட்டிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தீர்ப்பு கூறினார். புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா 11ம் தேதி துவங்கியது. விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. 2ம் நாள் மாலை நிகழ்வாக கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் கைகேயி, வாலி, ராமன் ஆகியோர் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இறுதியில் ராமன் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு பட்டிமன்றம், வேல்சொக்கநாதன் அறக்கட்டளை சார்பில், நேற்றுமுன்தினம் (13ம் தேதி) மாலை நடந்தது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனர் வேல் சொக்கநாதன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தலைமைச் செயலர் சத்தியவதி, பேராசிரியர் ராஜகோபால் ஆகியோர் நடுவராயமாக இருந்தனர். நோக்கர்கள் சார்பில் சண்முகவடிவேல், ராமன் என்ற தலைப்பில் ராமலிங்கம், கைகேயி என்ற தலைப்பில் பர்வின் சுல்தானா, வாலி என்ற தலைப்பில் சாரங்கபாணி ஆகியோர் விவாதம் செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், இந்த விவாதத்தின் மீது இறுதியாக தீர்ப்பளித்து பேசுகையில் "கைகேயிக்கு வந்தது மனமாற்றம் என கம்பனே கூறிவிட்டார். ஆனால் ராமனுக்கும், வாலிக்கும் வந்த மாற்றம், மன மாற்றம்தானா என்பதை அடிப்படையிலே நாம் சிந்திக்க வேண்டும். அதன்படி, கைகேயிக்கு வந்தது மன மாற்றம், வாலிக்கு குழம்பிய அறிவு தெளிவு பெற்றது. ராமனுக்கு இருந்த ஆன்ம மயக்கம் தீர்ந்தது. எனவே கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, உண்மையில் கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம், கைகேயிக்கு வந்தது தான் என தீர்ப்பளிக்கிறேன் என பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar