Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில்களுக்கு கால பூஜைக்கான ... கடையம் கோயில்களில் 17ம் தேதி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பராமாயணத்தில் மனமாற்றம் வந்தது கைகேயிக்குத்தான்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2012
10:05

புதுச்சேரி : கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம் வந்தது கைகேயிக்குதான் என, கம்பன் கழகம் சார்பில் நடந்த மேல் முறையீட்டு பட்டிமன்றத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தீர்ப்பு கூறினார். புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் கம்பன் விழா 11ம் தேதி துவங்கியது. விழாவில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. 2ம் நாள் மாலை நிகழ்வாக கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் கைகேயி, வாலி, ராமன் ஆகியோர் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. இறுதியில் ராமன் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு பட்டிமன்றம், வேல்சொக்கநாதன் அறக்கட்டளை சார்பில், நேற்றுமுன்தினம் (13ம் தேதி) மாலை நடந்தது. நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிறுவனர் வேல் சொக்கநாதன் முன்னிலை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், தலைமைச் செயலர் சத்தியவதி, பேராசிரியர் ராஜகோபால் ஆகியோர் நடுவராயமாக இருந்தனர். நோக்கர்கள் சார்பில் சண்முகவடிவேல், ராமன் என்ற தலைப்பில் ராமலிங்கம், கைகேயி என்ற தலைப்பில் பர்வின் சுல்தானா, வாலி என்ற தலைப்பில் சாரங்கபாணி ஆகியோர் விவாதம் செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், இந்த விவாதத்தின் மீது இறுதியாக தீர்ப்பளித்து பேசுகையில் "கைகேயிக்கு வந்தது மனமாற்றம் என கம்பனே கூறிவிட்டார். ஆனால் ராமனுக்கும், வாலிக்கும் வந்த மாற்றம், மன மாற்றம்தானா என்பதை அடிப்படையிலே நாம் சிந்திக்க வேண்டும். அதன்படி, கைகேயிக்கு வந்தது மன மாற்றம், வாலிக்கு குழம்பிய அறிவு தெளிவு பெற்றது. ராமனுக்கு இருந்த ஆன்ம மயக்கம் தீர்ந்தது. எனவே கீழ் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, உண்மையில் கற்றோரைப் பெரிதும் வியக்க வைக்கும் புதிரான மனமாற்றம், கைகேயிக்கு வந்தது தான் என தீர்ப்பளிக்கிறேன் என பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar