பதிவு செய்த நாள்
03
ஆக
2020
01:08
சூலூர்: ஆடிப்பெருக்கை ஒட்டி, சூலூர் வட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆடிப்பெருக்கை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில், சின்னியம்பாளையம், நீலம்பூர், மு.க.புதூர், அரசூர், சூலூர், கலங்கல் உள்ளிட்ட கிராமக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சுவாமி, அம்மனுக்கு, அதிகாலை சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கிராமப்பு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.