Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி அவிட்டம் தினத்தில் பூணுால் ... கைலாசநாதர் கோவிலில் சித்தருக்கு சிறப்பு பூஜை கைலாசநாதர் கோவிலில் சித்தருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் மாங்கனித்திருவிழா: விடையாற்றி உற்சவம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் மாங்கனித்திருவிழா: விடையாற்றி உற்சவம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2020
01:08

காரைக்கால் : காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக நடைபெறும் மாங்கனி திருவிழா, இந்தாண்டு கொரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.கடந்த ஜூலை 1ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், மறுநாள் திருக்கல்யாணம், பரமதத்தர் இரண்டு மாங்கனிகளை வீட்டிற்கு கொடுத்து அனுப்புதல், சிவபெருமான் பிச்சாண்டவராக அவதரித்து வீதி உலா வரும் போது மாங்கனிகளை வீசும் நிகழ்ச்சி அனைத்தும் கோவில் உட்பிரகாரத்தில் மிக எளிய முறையில் நடந்தது.விழாவின் இறுதி நாளான நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.

இதற்காக பஞ்சமூர்த்திகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் என அழைக்கப்படும் பிச்சாண்டவர், அம்பாள், வள்ளி தெய்வாணை, சமேதராக முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரி உற்சவர்களுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகங்கள் நடந்தது.தொடர்ந்து பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ், கோவில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாங்கனித்திருவிழா விடையாற்றி உற்சவத்தை அனைத்து பக்தர்களும் கண்டுகளிக்கும் வகையில் www.karaikaltemples.com என்ற யூ டியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar