Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பூர் அம்பிகை பராசக்தி ... பழநியில் உண்டியல் திறப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை ராமநாதபுரத்திற்கு சிருங்கேரி சுவாமி யாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2012
12:05

தர்மத்தைப் பின்பற்றி வாழ்வதே சிறந்த வாழ்வு என்று குறிப்பிடுகிறார் சிருங்கேரி சுவாமிகள். மனிதனுக்கு பொன், பெண் ஆகிய இரண்டு விஷயத்தில் பேராசை ஏற்படுகிறது. இந்த இரண்டிலும் ஆசை இல்லாதவனே உத்தமன். அவனே தர்மப்படி வாழ்வதில் ஈடுபாடு கொண்டிருப்பான். தர்மத்தின் மூலமாக மட்டுமே மனிதன் நிரந்தர சுகம் பெற முடியும். ஒவ்வொருவரும் தனக்குத் தானே நன்மையைத் தேடி கொள்ள எண்ணினால், தர்மப்படி வாழ்வது ஒன்றே வழி. வாழும் காலத்தில் செய்த தர்மத்தின் புண்ணிய பலன் இறந்த பின்னும் ஒருவரைத் தொடர்ந்து வரும். வேறு யாரும் உங்களுக்கு அப்போது உதவி செய்ய முடியாது.  ஒரு நற்செயலைச் செய்ய இப்போது புத்தி வந்து விட்டது என்றால் அதை உடனே செய்து விட்டால் சரி! நாளை செய்து கொள்ளலாம் என்று இருந்து விடக்கூடாது. அதனால் தர்மத்தை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விட்டால் தாமதப்படுத்தக் கூடாது. கட்டிய வீடு, வாங்கிய நிலம், பொன், பணம் ஆகியவை எல்லாம் நமக்கு ஒரு நாளும் சொந்தமாகாது. நாம் செய்த தர்மம் மட்டுமே மரணத்திற்கு அப்பாலும் கூடவரும். தர்மத்தை பின்பற்றி வாழும் வாழ்வே சிறந்த வாழ்வு இத்தகைய அருளுரையை உதிர்த்த சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி நாளை (மே 17) காலை 10-12 வரை ராமநாதபுரம் அரண்மனையில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். போன் 94431 68916. மாலை 6 மணிக்கு ராமேஸ்வரம் சிருங்கேரி சங்கர மடம் செல்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar