Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... ஆவணி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலம் சிறப்பு பூஜை ஆவணி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க கூட்டமாக செல்ல அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கரைக்க கூட்டமாக செல்ல அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

17 ஆக
2020
05:08

உளுந்தூர்பேட்டை: வீட்டில் வைத்து விநாயகர் சிலைகளை பூஜை செய்து வழிபடும் பக்தர்கள் நீர்நிலைகளில் கரைக்க கூட்டமாக செல்ல அனுமதி இல்லை என உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் கூறுகையில:  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 22ம் தேதி சனிக்கிழமை நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை. இருப்பினும் மக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் வீட்டிலேயே வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடலாம் அதற்கு எந்தவித தடையும் இல்லை. விநாயகர் பூஜை முடிந்து நீர்நிலைகளில் கரைக்க எடுத்துச்செல்ல 3 க்கும் மேற்பட்டோர் அல்லது கூட்டமாக செல்ல அனுமதி கிடையாது. மேளதாளத்துடன் வண்ணப் பொடிகளைத் தூவி ஊர்வலமாக செல்ல அனுமதி இல்லை. எனவே விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஓரிரு நாட்களில் நடக்க உள்ள விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விழா குறித்த சில கருத்துக்கள் வழங்கப்பட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படவுள்ளது. விதிகளை மீறி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி விஜயகுமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar