திருப்பரங்குன்றத்தில் பங்குனி உத்திர விழா: பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 10:04
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கடந்த 23ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் காவடி, பால் குடம் ஏந்தி குவிந்து வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், 4-ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.