Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவிலில் மொட்டை, யாகம் நடத்திய ... விநாயகர் சதுர்த்தி விழா: நாடு முழுதும் கோலாகலம் விநாயகர் சதுர்த்தி விழா: நாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுறை நாதேசுவரர் கோவில் நிதி இல்லாமல் திருப்பணி தொய்வு
எழுத்தின் அளவு:
திருமுறை நாதேசுவரர் கோவில் நிதி இல்லாமல் திருப்பணி தொய்வு

பதிவு செய்த நாள்

21 ஆக
2020
02:08

கடலுார் : கடலுார் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமுறை நாதேசுவரர் கோவில் திருப்பணி, போதிய நிதி ஆதாரம் இல்லாததால் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியும், புதுச்சேரி ஏம்பலம் அருகேயும் அமைந்துள்ளது பள்ளிப்பட்டு கிராமம். இங்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த திருமுறை நாயகி உடனுறை திருமுறை நாதேசுவரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் பரமரிப்பின்றி சிதைவுண்ட நிலையில் இருந்தது. சிவனடியார்கள் மற்றும் ஊர் மக்கள் முயற்சியால் சிவலிங்கத்தை வெளியில் எடுத்து, கருவறை இருந்த இடத்தில் எழுந்தருள செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால், அங்கு சிறிய கொட்டகை அமைத்து, 2007 ம் ஆண்டு முதல் வழிபாடு நடைபெற்றது.

இந்நிலையில், 2016 ம் ஆண்டு கார்த்திகை திருவிளக்கு பூஜை நடத்திய திருப்பூர் நமச்சிவாய அறக்கட்டளை தலைவர் வெற்றிவேல், திருவாடுதுறை தேவாரம் பயிற்சி மைய ஆசிரியை நெய்வேலி வசந்தி ஆகியோர், கோவிலை புதுப்பிக்க முடிவு செய்தனர்.தமிழகம், புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மற்றும்திருமுறை நாதேசுவரர் கோவில் வழிப்பாட்டுக் குழு தலைவர் ஞானவேலு, புதுச்சேரி வெங்கடபதி மற்றும் பள்ளிப்பட்டு கிராமவாசிகளின் முயற்சியால், 2017ம் ஆண்டு திருப்பணி துவங்கி கற்கோவிலாக கட்டும்பணி நடந்து வருகிறது.

மூலவருக்கு முழுமையாக கற்கோவில் கட்டும் வேலை விதானம் வரை நிறைவுற்றது. போதிய நிதி இல்லாததால், அம்பாள் கோவில் விதானம், மகாமண்டபம், சுற்றுச்சுவர், தரைப்பகுதி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் தொய்வு ஏற்பட்டுள்ளது.எனவே, இக்கோவில் திருப்பணி தொய்வின்றி நடக்க, பொதுமக்கள், சிவனடியார்கள் நிதியுதவி அளித்து ஆன்மிக பணியில் பங்கெடுக்க வேண்டும் என, கோவில் திருப்பணிக்குழு, பள்ளிப்பட்டு கிராம மக்கள் மற்றும் திருமுறை நாதேசுவரர் வழிபாட்டு மன்றத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar