Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சித்தர் குழந்தைவேல் சுவாமிகள் ... சங்கடம் தீர்க்குமா சாயா கிரகங்கள் : இன்று ராகு, கேது பெயர்ச்சி சங்கடம் தீர்க்குமா சாயா கிரகங்கள் : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை ராகு – கேது பெயர்ச்சி: கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
நாளை ராகு – கேது பெயர்ச்சி: கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

31 ஆக
2020
05:08

திருக்கோவிலூர்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. கிட்டத்தட்ட நூற்றி அறுபது நாட்களுக்குப் பிறகு வழிபாட்டுத் தலங்களை திறக்க, கடுமையான வழி காட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக நாளை கோயில்கள் திறக்கப்படுகின்றன.

திருக்கோவிலூரில் பிரசித்தி பெற்ற நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவில், அட்டவீரட்டானங்களில் ஒன்றான கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடை திறப்பதற்கு நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி சார்பில் இரண்டு கோவில்களிலும், கிருமி நாசினி தெளித்து, தூய்மைப்படுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் செல்லப்பிள்ளை தலைமையில், துப்புரவு ஆய்வாளர் முத்துக்குமாரன், துப்புரவு மேற்பார்வையாளர் சீனிவாசன் மேற்பார்வையில், தூய்மைப் பணியாளர்கள் கோவில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இன்று ராகு கேது பெயர்ச்சி, தற்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு ரிஷபத்திற்கும், தனுசு ராசியில் இருக்கும் கேது விருச்சிகத்திற்கும் 2020 செப்.1 ல் பகல் 2:05 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2022 மார்ச் 21 வரை இங்கு தங்கியிருப்பர். இத்தினத்தில் கோவில் நடை திறக்கப்படுவதால் நோய் பரவல் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வீரட்டானேஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி நிகழ்ச்சி நடப்பதால் பக்தர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தனிமனித இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திருக்கோவிலூரில் நடுநாட்டு திருப்பதி என போற்றப்படும் உலகளந்த பெருமாள் கோவில், அட்டவீரட்டானங்களில் ஒன்றான வீரட்டானேஸ்வரர் கோவில் நடைதிறப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar