Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு பூஜையுடன் கோவில்கள் ... கோவில்கள் திறப்பு: பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்ன? கோவில்கள் திறப்பு: பின்பற்றப்பட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை

பதிவு செய்த நாள்

01 செப்
2020
09:09

திருவண்ணாமலை; ஊரடங்கு தளர்வால், ஐந்து மாதங்களுக்கு பின், இன்று தமிழகம் முழுதும் கோவில்கள் திறக்கப்படுகின்றன. ஆயினும், திருவண்ணாமலையில் இன்று, பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று முதல், சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள், அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம், இன்று காலை, 10:15 முதல், நாளை காலை, 11:08 வரை பவுர்ணமி திதி உள்ளது.அண்ணாமலையார் கோவில் திறக்கப்படும் நிலையில், கிரிவலத்துக்கு அனுமதி கிட்டுமா என்ற எதிர்பார்ப்பு, பக்தர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், கொரோனா பரவலை தடுக்க, கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆறாவது மாதமாக, கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சதுரகிரியில் அனுமதிவிருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இன்றும், நாளையும் காலை, 7:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, தாணிப்பாறை கேட் அருகே, தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை சோதித்த பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வாசலிலும், தெர்மல் ஸ்கேனர் டெஸ்ட் செய்து, அனுமதிக்கப்படுவர்.தரிசனத்துக்கு பின், உடனடியாக கீழிறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்குவதற்கு அனுமதியில்லை. குழந்தைகள், முதியவர்கள், நோய் பாதிப்பு உள்ளவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என, அறநிலையத் துறை, வேண்டுகோள் விடுத்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar