Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஏழேழு பிறவிக்கும் பயமில்லை கூடலுாரில் ராமாயணக் கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
04:09

திருமதி. தேச.மங்கையர்க்கரசி

தனம், தான்யம், சந்தானம், தைரியம் என மகாலட்சுமி அருளால் குடும்பத்தில் அனைத்தும் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. இதையே பெரியவர்கள் ‘இந்த குடும்பம் லட்சுமி கடாட்சமுடன் இருக்கிறது’  என்பார்கள். இந்த தெய்வீக நிலையை ஏற்படுத்தும் எளிய வழிபாடு பூரண கலச வழிபாடு.  
விழாக் காலங்களில் கோயிலுக்கு வரும் மகான்கள், பெரியவர்களை வரவேற்க வைப்பது பூரண கலசம். வரலட்சுமி பூஜை, குபேர பூஜை, மகாலட்சுமி பூஜை என விசேஷ நாட்களில் கலச வழிபாடு செய்வர். இதை நிரந்தரமாக வீட்டில் பூஜித்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். கலசத்தை இரண்டு விதமாக வைக்கலாம்.  ஒன்று நீர்க்கலசம். வாரம் ஒருமுறை மாற்ற வேண்டும். மற்றொன்று அரிசி கலசம். 3 மாதம் வரை வைக்கலாம்.  
மண், பித்தளை, செம்பு, வெள்ளி, பஞ்சலோகத்தால் ஆனதாக கலசம் இருக்க வேண்டும். நீர், நெல் (அ) பச்சரிசி, தாம்பாளம்,  மட்டைத்தேங்காய் (அ) உரித்த தேங்காய், மாவிலை, மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம், வாசனை திரவியப் பொடி, ரவிக்கை துணி இவற்றை தயார் செய்து கொள்ளுங்கள்.
கலசத்தை துாய்மைப்படுத்தி முடிந்தால் அதன் மீது நுால் சுற்றலாம்.ஒரு தாம்பாளத்தில் பச்சரிசியை பரப்பி அதில் கலசம் வைத்து முக்கால் பகுதி நீர் ஊற்ற வேண்டும். மஞ்சள் துாள், வாசனை திரவியப்பொடி சேர்த்து அதன் மேலே மஞ்சள் தடவிய தேங்காய், மாவிலை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்கள், ரவிக்கைத்துணி சாத்த வேண்டும். கங்கை, ராமேஸ்வர தீர்த்தம் இருந்தால் நீரில் சிறிது சேர்க்கலாம். மகாலட்சுமி 108 போற்றி சொல்லி வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கல்கண்டு நெய்வேத்தியம் செய்து ‘மகாலட்சுமி தாயே! என் வீட்டில் நிரந்தரமாக எழுந்தருளி அருள்புரிய வேண்டும்’  என வழிபட வேண்டும். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலையில் கலசத்தை புதுப்பிப்பது நல்லது.  வாரம் ஒருமுறை புதுப்பிக்கும் போது நீரை கால் படாத இடத்தில் ஊற்றி வேண்டும். தேங்காயில் இனிப்பு பண்டம் செய்து சாப்பிடலாம்.  
அரிசிகலசம் வைத்து வழிபடுபவர்கள் தாம்பாளத்தில் பச்சரிசி பரப்பி கலசம் வைத்து உள்ளே நீருக்கு பதிலாக பச்சரிசி முக்கால் பங்கு நிரப்பி அதில் விரலி மஞ்சள், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு, நாணயங்களை இட்டு மட்டைத் தேங்காயை மாவிலையோடு வைத்து சந்தனம், குங்குமம் இட்டு மேலே சொன்னபடி வழிபட வேண்டும். புதுப்பிக்கும்போது  நாணயங்களை தானம் அளிக்கலாம். அரிசியில் பொங்கல், பாயசம் செய்யலாம் அல்லது எறும்புக்கு, மாடுகளுக்கு கொடுக்கலாம். 3 மாதம் கழித்து ஒரு வெள்ளிக்கிழமையில் புதிய கலசம் அமைக்கலாம்.
அன்றாட பூஜையின் போது தெய்வங்களை எப்படி வழிபடுவோமோ அதில் ஒன்றாக கலசத்தை வழிபடலாம். பூஜையறை இல்லாவிட்டால் பூஜை செய்யும் அலமாரிக்கு கீழே பலகை அல்லது ஸ்டூல் மீது கலசம் வைக்கலாம்.  
பூரண கலசம் வைத்திருக்கும் வீட்டில் பெண்கள் கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சஹஸ்ர நாமம் சொல்ல அலைமகள் அருளால் ஐஸ்வர்யம் பெருகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar