சிவகங்கை : சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி 2வது சனிவாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பெருமாளை தரிசித்தனர். ஸ்ரீதேவி, பூதேவியருடன்சவுமிய நாராயண பெருமாள் உற்ஸவ மூர்த்தியாக காட்சி அளித்தனர். தேவஸ்தானம்மற்றும் உபயதாரர்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.