Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் ... 2500 ஆண்டு முந்தைய குத்துக்கல்: தொல்லியல் ஆய்வாளர் தகவல் 2500 ஆண்டு முந்தைய குத்துக்கல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜசோழனின் 1035வது சதயவிழா: குறைந்தளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு
எழுத்தின் அளவு:
ராஜராஜசோழனின் 1035வது சதயவிழா: குறைந்தளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு

பதிவு செய்த நாள்

22 அக்
2020
05:10

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் வரும் 26-ம் தேதி மன்னன் ராஜராஜசோழனின் 1035-வது சதய விழா நடைபெறம் நிலையில், கோவிலுக்குள் குறைந்தளவில் பக்தர்களை அனுமதிப்பது என சதய விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா குழுத் தலைவர் திருஞானம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் 1035-வது சதய விழா வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

தற்போது கொரோனா தொற்று வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருப்பதால், அரசின் வழிகாட்டுதலைகளை கடைபிடித்து விழாவினை கொண்டாட உள்ளோம்.
மாமன்னன் ராஜராஜசோழனின் புகழை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் சதய விழாவில் வழக்கமாக கொண்டாடப்படும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ராஜவீதிகளில் வீதிவுலாக்கள் இன்றி, ஒரு நாள் விழாவாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 26-ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையும், 6.30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதலும், 7 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் ஓதுவார்களின் பாராயண ஊர்வலமும், காலை 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகமும், மதியம் 1 மணிக்கு தீபாரதனையை தருமபுர ஆதீனம் மடம் சார்பில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு கோயில் உள்பிரகார வளாகத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அறநிலையத்துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், சதயவிழா குழு உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சதயவிழாவையொட்டி, கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல தடுப்புகளும், ராஜராஜசோழன் சிலையை துாய்மை செய்து வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar