Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் ... 2500 ஆண்டு முந்தைய குத்துக்கல்: தொல்லியல் ஆய்வாளர் தகவல் 2500 ஆண்டு முந்தைய குத்துக்கல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜராஜசோழனின் 1035வது சதயவிழா: குறைந்தளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு
எழுத்தின் அளவு:
ராஜராஜசோழனின் 1035வது சதயவிழா: குறைந்தளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு

பதிவு செய்த நாள்

22 அக்
2020
05:10

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் வரும் 26-ம் தேதி மன்னன் ராஜராஜசோழனின் 1035-வது சதய விழா நடைபெறம் நிலையில், கோவிலுக்குள் குறைந்தளவில் பக்தர்களை அனுமதிப்பது என சதய விழா குழுவினர் முடிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் சதய விழா குழுத் தலைவர் திருஞானம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் 1035-வது சதய விழா வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது.

தற்போது கொரோனா தொற்று வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருப்பதால், அரசின் வழிகாட்டுதலைகளை கடைபிடித்து விழாவினை கொண்டாட உள்ளோம்.
மாமன்னன் ராஜராஜசோழனின் புகழை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் சதய விழாவில் வழக்கமாக கொண்டாடப்படும் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ராஜவீதிகளில் வீதிவுலாக்கள் இன்றி, ஒரு நாள் விழாவாகவும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி 26-ம் தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையும், 6.30 மணிக்கு கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதலும், 7 மணிக்கு மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வும், அதைத் தொடர்ந்து கோயில் உள்பிரகாரத்தில் ஓதுவார்களின் பாராயண ஊர்வலமும், காலை 9.15 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகமும், மதியம் 1 மணிக்கு தீபாரதனையை தருமபுர ஆதீனம் மடம் சார்பில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு கோயில் உள்பிரகார வளாகத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் சமூக இடைவெளியுடன் குறைந்த அளவில் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அறநிலையத்துறை உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் மாதவன், சதயவிழா குழு உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சதயவிழாவையொட்டி, கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல தடுப்புகளும், ராஜராஜசோழன் சிலையை துாய்மை செய்து வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar