தன் தந்தையை உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். வயதில முதிர்ந்த தந்தையால் எதையும் சரிவர செய்ய இயலவில்லை. அவர் சாப்பிடும் போது சோறு அவரது உடையிலும், தரையிலும் விழுந்தது. அருகில் சாப்பிடுபவர்கள் பெரியவரைப் பார்த்து முகம் சுழித்தனர். ஆனால் மகனோ அமைதியாக தந்தை சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். தந்தை சாப்பிட்டு முடித்ததும் தயக்கம் ஏதுமின்றி ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்றான். அவரது உடையில் ஒட்டிய உணவை துடைத்து, கழுவி, அவரது தலையை வாரி விட்டான். மூக்குக் கண்ணாடியைத் துடைத்து அணிவித்தான். இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வந்த போது அங்கிருந்த அனைவரும் அமைதியுடன் பார்த்தனர். மகன் சாப்பிட்டதற்கு பணம் செலுத்தி தந்தையை அழைத்துச் செல்ல தயாரானான். அப்போது அங்கிருந்த ஒருவர், “தம்பி முக்கியமான ஒன்றை விட்டு செல்கிறீர்களே...’’ என உரக்கக் கேட்டார். ‘‘இல்லையே’’ என்றான். அதற்கு அவர் “இல்லை தம்பி! நீங்கள் முக்கியமான ஒன்றை தந்து விட்டுச் செல்கிறீர்கள்; இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் அது. அத்துடன் பெற்றோருக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விட்டு விட்டுச் செல்கிறீர்கள். உங்களைப் போல பிள்ளைகள் பொறுமையை கடைபிடித்தால் நல்ல மனிதனாகலாம்.”என்றார். அப்பொழுது உணவகத்தில் இருந்த அனைவரும் எழுந்து கைதட்டி பாராட்டினர் உன் வாழ்நாட்கள் நீடித்திருக்க உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.