பதிவு செய்த நாள்
27
நவ
2020
05:11
திருச்சி: வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, நேற்று, திருப்பதி தேவஸ்தானத்தின் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.
முஸ்லிம் படையெடுப்பின் போது, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்த நம்பெருமாள், பாதுகாப்பு கருதி, திருப்பதி திருமலையில் 50 ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார்.இதனை நினைவுகூரும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஆண்டுதோறும், கைசிக ஏகாதசி தினத்தன்று, ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யப்படும். கைசிக ஏகாதசி தினமான நேற்று, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ஸ்ரீரங்கம் மூலவர் பெருமாள், நம்பெருமாள், ரெங்கநாயகி தாயார் மற்றும் ராமானுஜருக்கு பட்டு வஸ்திரங்கள், பட்டு புடவைகள், குடைகள், மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர்.திருமலை தேவஸ்தான செயல் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ஆகியோர் தலைமையில் எடுத்து வந்த வஸ்திரங்களை, கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து, கோவில் உள் பிரகாரங்களில் வலம் வந்தனர். தொடர்ந்து, அவற்றை, ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன், பட்டாச்சார்யர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.அந்த வஸ்திரங்கள் நம்பெருமாளுக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்பட்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். இதில் ஸ்ரீரங்கம் கோவில்காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் அமைச்சர் கமலக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.