காரைக்கால் : காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் நேற்று பவித்ரோத்ஸவம் தொடங்கியது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.அதனையொட்டி அன்று காலை புண்யாஹசனம், பவித்ராபிரதிஷ்டை, பிரகாரப் புறப்பாடு, கண்ணாடி சேவை, கும்ப பூஜை, சக்ரத்தாழ்வார், பூர்ணாஹீதி வாஸ்து ஹோமத்துடன் துவங்கியது.நேற்று கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாஹீதி, யுக்த ஹோமம், பூர்ணாஹீதி நடந்தது.முன்னதாக ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.