Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றம் மலை மீது ... நரசிங்கம்பட்டியில் மண்ணை மலையாக்கும் திருவிழா நரசிங்கம்பட்டியில் மண்ணை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் கார்த்திகை திருவிழா
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் கார்த்திகை திருவிழா

பதிவு செய்த நாள்

30 நவ
2020
08:11

 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கார்த்திகை தீபமும், சொக்கப் பனை கொளுத்தப்பட்டது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமியம்மன், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர், மேற்கு ரதவீதி லிங்கேஸ்வரர், நாகல் நகர் வரதராஜ பெருமாள், பாரதி புரம் புவனேஸ்வரி அம்மன் கோயில்களில் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. வீடுகளில் பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர். சிறப்பு பூஜைகளும் செய்தனர்.

பழநி: மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சின்னக்குமாரசுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். மேற்கு வெளிப்பிரகாரத்தில் தீபக்கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதே போல் திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. செயல் அலுவலர் கிராந்திகுமார்பாடி, துணை ஆணையர் செந்தில் குமார் பங்கேற்றனர். கொரோனாவால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் கோயில் முன்பு படி மேடையில் அமைந்துள்ள கம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.வடமதுரை: வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், திருமஞ்சனம் நடந்தது. மாலையில் மகா தீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டது. வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பாலமுருகன், தென்னம்பட்டி சவடம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar