Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நரசிங்கம்பட்டியில் மண்ணை ... சென்னை கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம் சென்னை கோவில்களில் கார்த்திகை தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

30 நவ
2020
09:11

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை கிருத்திகை விழா மற்றும் மஹா தீபத் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

மூன்று நாட்களாக பெய்த மழை, நேற்று, சற்று ஓய்வு கொடுத்ததால், அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், பன்னீர் விபூதி, பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், கோவிலில் உட்புறப்பாடு நடந்தது.

அப்போது மயில் வாகன மண்டபத்தில் வைக்கப்பட்ட சொக்கப்பனையில், நெய் தீபம் ஏற்றப்பட்டது.அதே நேரத்தில், கோவிலின் எதிரில் உள்ள, பச்சரிசி மலையில், பெரிய அகல் விளக்கில், 300 கிலோ நெய், இரண்டரை அடி கனம், 10 மீ., நீளமுள்ள திரியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக தீபத் திருவிழாவில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. காலை, 6:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த தீபத்தை பார்த்த பின், திருத்தணி நகரம் முழுதும் வீடுகள் மற்றும் கடைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். நிவர் புயல் காரணமாக, மூன்று நாட்களாக, திருத்தணியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மலைக்கோவிலில் பக்தர்கள் மிக குறைவாகவே இருந்தனர்.நேற்று காலை முதல், மாலை வரை, திருத்தணியில் தொடர் மழை இல்லாததால், காவடிகளுடன் மலைக்கோவிலில் குவிந்ததால் பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar