பதிவு செய்த நாள்
14
டிச
2020
04:12
புதுச்சேரி: சனி பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டி கோவிலில் நல்லெண்ணெயில் முகம் பார்த்து சனி தோஷம் கழிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவான், வரும் 27ம் தேதி காலை 5:22 மணிக்கு, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். சனி பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டியில் உள்ள நவக்கிரக கோவிலில் பல்வேறு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கோவிலில், உலகிலேயே மிக உயரமான 27அடி உயர பக்த அனுக்கிரக விஸ்வரூப சனீஸ்வரர் பஞ்சலோகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது. சனி பெயர்ச்சிக்கு முதல் நாளான 26ம் தேதியன்று மகா யாக த்துக்கும், அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சனி பெயர்ச்சியன்று காலை 5:22 மணிக்கு, 80 அடி உயர மகர கும்பத்தில் 8,000 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றப்படுகிறது. மேலும், சனீஸ்வர பக வானுக்கு இடைவிடாமல் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெய் கிணற்றில் சாமி முகத்துடன், பக்தர்கள் தங்களது முகம் பார்த்து தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கித்தந்து, இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்; இதன் மூலமாக அனைத்து விதமான சனி தோஷத்திலிருந்து விடுபடலாம் என, கீதாராம குருக்கள் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு, 93454 51655, 94862 68596, 94432 63442 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.