பதிவு செய்த நாள்
18
டிச
2020
04:12
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 29 லட்சம் ரூபாயை செலுத்தி இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இந்து சமய உதவிஆணையர்கள் மேல்மலையனுார் ராமு, திருவண்ணாமலை ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் எண்ணப்பட்டன.இதில் 29 லட்சத்து 81ஆயிரத்து 359 ரூபாய் ரொக்கப்பணமும், -116 கிராம் தங்கம், 425 கிராம் வெள்ளி பொருட்களை காணிக்கையாகசெலுத்தி இருந்தனர்.இதில் அறங்காவலர் குழு தலைவர் சரவணன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வளர்கள் அன்பழகன்,சரவணன், கோலியனூர் புத்துவாயம்மன் கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ்,ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி, சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.