பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசனம் டிச., 30ல் நடக்கிறது.இக்கோயிலில் உள்ள சிவகாம சுந்தரி, நடராஜர் ஆருத்ரா தரிசன விழாடிச., 21 இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன்விழா துவங்கிறது.
டிச.22 முதல் டிச. 28 வரை திருவெம்பாவை வாசித்தாலும், மாணிக்கவாசகர் ஆடிவீதி வலம் வருதல் நடக்கிறது.டிச., 29 ல் இரவு 7:00 மணிக்கு நடராஜர் சிவகாம சுந்தரியுடன் பச்சை சாத்திபுறப்பாடு நடக்கிறது. 8:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் சுவாமிஆனந்த தாண்டவம் ஆடுதல் நடக்கிறது. டிச.30 அதிகாலை 3:00 மணிக்கு ஹோமங்கள் ஆரம்பமாகி, காலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது. இதனையடுத்து 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் மகா தீபாராதனை நடக்கிறது.காலை 9:00 மணிக்கு உற்சவர், மாணிக்கவாசகர் வீதி உலா, இரவு விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.