அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை வள்ளலார் மன்றத்தில் பூச நட்சத்திரம், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சன்மார்க்க சங்க கொடி ஏற்றப்பட்டது.மன்ற தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். அண்ணாமலை, செல்வராஜ், ஏழுமலை முன்னிலை வகித்தனர். தமிழ் சங்க தலைவர் புருஷோத்தமன் சன்மார்க்க சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மகாராஜன், எல்லப்பன், சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.