நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் மூலவரும், ஊஞ்சல் உற்சவத்தில் உற்சவரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். அருள்தரும் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.