பதிவு செய்த நாள்
04
ஜன
2021
03:01
வேலூர்: வேலூரில் நடந்த, சக்தி அம்மாவின், 45வது ஜெயந்தி விழாவில், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ் பங்கேற்றார். வேலூர், நாராயணி பீடம் சக்தி அம்மாவின், 45வது ஜெயந்தி விழா, திருமலைக்கோடியில் நேற்று நடந்தது. இதையொட்டி, நாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், நாராயணி பள்ளியிலிருந்து, ஏராளமான பக்தர்கள் யானை, குதிரைகள் ஊர்வலத்துடன் சீர்வரிசை தட்டுக்களுடன், நாராயணி பீடம் சென்றனர். அங்கு சக்தி அம்மாவுக்கு, 45வது ஜெயந்தி விழா, பாத பூஜை நடந்தது. தொடர்ந்து, சக்தி அம்மாவுக்கு, பக்தர்கள் மலர் அபிஷேகம் செய்தனர். விழாவில், மத்திய வணிகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ், கோவை, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி, வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் முரளிதர சுவாமிகள், ஆந்திரா மாநில அமைச்சர் பெத்தி ரெட்டி ராமகிருஷ்ண ரெட்டி, அணைக்கட்டு எம்.எல்.ஏ., நந்தகுமார், நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், தங்கக்கோவில் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி அறங்காவலர் குழு தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.