Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்க குதிரை வாகனத்தில் ஸ்ரீரங்கம் ... பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாக்., இந்துகோவில் இடிப்பு வழக்கு; 12 போலீசார் இடைக்காலப் பணிநீக்கம்
எழுத்தின் அளவு:
பாக்., இந்துகோவில் இடிப்பு வழக்கு; 12 போலீசார் இடைக்காலப் பணிநீக்கம்

பதிவு செய்த நாள்

15 ஜன
2021
06:01

பாகிஸ்தானின் கைபர் மாகாணம் பாட்டன்குவா அரசு 12 பாகிஸ்தான் போலீசாரை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினரால் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. டெரி என்கிற கிராமத்தில் உள்ள இந்த இந்து கோவில் மிகவும் பழமையானது. இதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை தருவர்.

இந்த கலவரத்துக்கு 33 பாகிஸ்தான் போலீசார் உதவிகரமாக இருந்ததற்காக இவர்கள்மீது ஓராண்டுக்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் புதியதாக சில மாற்று கட்டுமானங்கள் செய்ய இந்து அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கோவிலில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டன. இந்த புதிய கட்டடம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தீயிடப்பட்டது. இந்த மாகாணத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கோகட் ரீஜன் இதுகுறித்து விசாரணை செய்துவந்தார். இந்த வன்முறை சம்பவம் நடந்தபோது அதனை தடுக்க முயலாமல் அஜாக்கிரதையாக இருந்த 73 பாகிஸ்தான் போலீசார் மீது விசாரணை கமிஷன் வைக்கப்பட்டது. இதில் 12 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு இடைக்கால பணிநீக்கம் அளிக்கப்பட்டது. கோவிலை சேதப்படுத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மவுலானா ஷரீப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சேதப்படுத்தப்பட்ட இந்த கோயிலை மீண்டும் கட்டுவதற்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று பாக்., சிறுபான்மையினர் நல அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தி உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar