பாகிஸ்தானின் கைபர் மாகாணம் பாட்டன்குவா அரசு 12 பாகிஸ்தான் போலீசாரை இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஓர் இந்துக் கோவில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினரால் எரிக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது. டெரி என்கிற கிராமத்தில் உள்ள இந்த இந்து கோவில் மிகவும் பழமையானது. இதற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் வருகை தருவர்.
இந்த கலவரத்துக்கு 33 பாகிஸ்தான் போலீசார் உதவிகரமாக இருந்ததற்காக இவர்கள்மீது ஓராண்டுக்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் புதியதாக சில மாற்று கட்டுமானங்கள் செய்ய இந்து அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அடுத்து இந்த கோவிலில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டன. இந்த புதிய கட்டடம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தீயிடப்பட்டது. இந்த மாகாணத்தின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கோகட் ரீஜன் இதுகுறித்து விசாரணை செய்துவந்தார். இந்த வன்முறை சம்பவம் நடந்தபோது அதனை தடுக்க முயலாமல் அஜாக்கிரதையாக இருந்த 73 பாகிஸ்தான் போலீசார் மீது விசாரணை கமிஷன் வைக்கப்பட்டது. இதில் 12 போலீசார் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவர்களுக்கு இடைக்கால பணிநீக்கம் அளிக்கப்பட்டது. கோவிலை சேதப்படுத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் தலைவன் மவுலானா ஷரீப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சேதப்படுத்தப்பட்ட இந்த கோயிலை மீண்டும் கட்டுவதற்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று பாக்., சிறுபான்மையினர் நல அமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுறுத்தி உள்ளார்.