Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூசத் திருவிழா: தேரோட்டம் ... கூடலூர் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழா கூடலூர் முருகன் கோயில்களில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா
எழுத்தின் அளவு:
நயினார்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி விழா

பதிவு செய்த நாள்

28 ஜன
2021
10:01

பரமக்குடி: பரமக்குடி மற்றும் நயினார்கோவில் பகுதிகளில் தைப்பூச தீர்த்தவாரி விழா நடந்தது. இதனையொட்டி வைகை ஆற்றில் இறங்கிய சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூடினர்.

நயினார்கோவில் சவுந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை 8:00 மணிக்கு சுவாமி, அம்பாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, அக்கிரமேசி கிராம எல்லையை அடைந்தார்.

அங்கு வைகை ஆற்றங்கரையில் குணநதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளினர். பின்னர் பகல் 12:45 மணிக்கு சிறகிக்கோட்டை - மஞ்சக்கொல்லை வைகை ஆற்றில் இறங்கினார். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்து சுவாமி தீர்த்தவாரி கண்டருளினார். அப்போது கிராம மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளை சுவாமி இருந்த திசையில் அள்ளி வீசி படைத்தனர். இதனால் தொடர்ந்து தங்களது நிலங்களில் விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை தெரிவித்தனர். அப்போது பக்தர்களுக்கு நீர் மோர், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை மீண்டும் சுவாமி புறப்பாடாகி இரவு 8:00 மணிக்கு கோயிலை அடைந்தார். சுற்றுவட்ட கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

*பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி கோயிலில், நேற்று காலை 8:00 மணிக்கு பழநி ஆண்டவருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் சிம்மாசனத்தில் புறப்பாடாகி, சவுராஷ்டிர மேல் நிலைப் பள்ளி அருகில் உள்ள குமரசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிவலம் வந்து கோயிலை அடைந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடு, சாலை கிணறு அருகில், ராமானுஜருக்கு என, தனி சன்னிதி உள்ளது. இங்கு ... மேலும்
 
temple news
நாமக்கல்; ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம், 50, தனது ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் சொருகு பட்டை சப்பரத்தில் பூஞ்சோலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar