சுபவிஷயங்களை நடத்த வளர்பிறை நாட்களைத் தேர்ந்தெடுப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2012 04:06
சின்னதிருப்பதி நவக்கிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம். மனதிற்கும் சந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வளர்பிறை நாட்களில் மனோபலம் அதிகரிக்கும். இதன் அடிப்படையில், சந்திரன் பலம் பெறும் பவுர்ணமியன்று விரதம், கிரிவலம், திருவிழா போன்ற நல்ல விஷயங்களை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தனர். மனிதன் வேறு. மனம் வேறு அல்ல. மனத்தின் வெளிப்பாடு தான் மனிதன். வளர்பிறை நாட்கள் மனதிற்கு பலம் தருபவையாகும். சுப விஷயங்களை வளர்பிறையில் நடத்துவது நன்மை தரும்.