Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பூர் சக்தி மாரியம்மன் பொங்கல் ... சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் கைலாய காட்சியுடன் திருமாங்கல்யம் சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 மார்
2021
11:03

பேரூர்: பேரூரா பட்டீசா கோஷம் முழங்க, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக, இன்று(மார்ச் 25) மாலை நடந்தது.


கோவை, பேரூர் பட்டீசுவரர் கோவில், பங்குனி உத்திரத் தேர்த்திருவிழா, கடந்த, 19ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையடுத்து, சூரியபிரபை, சந்திரபிரபை திருவீதியுலா, 22ம் தேதி பஞ்சமூர்த்திகள், காமதேனு திருவீதியுலா நடந்தது. மறுநாள், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சியளித்தார். நேற்று முன்தினம் மாலை, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் முடிந்து, வெள்ளை யானை சேவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. காலை, 9:30 மணிக்கு சுவாமி சோமாஸ்கந்தர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்ரமணியர், நடராஜர் தேரிகளில் எழுந்தருளினர்.


பக்தர்கள் திருத்தேர்களில் வீற்றிருந்த சுவாமிகளை தரிசித்தனர். திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு, மாலை 4:10 மணிக்கு நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பக்தர்கள் புடைசூழ பேரூரா பட்டீசா கோஷம் முழங்க, சிறுவாணி ரோடு, ரத வீதிகளின் வழியாக தேர்கள் வலம் வந்தன. பக்தர்கள் அன்னதானம், நீர்மோர் உள்ளிட்டவைகளை வழங்கினர். சிறுவாணி ரோட்டில் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. வரும், 28ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கொடியிறக்குதலுடன் பங்குனி உத்திரவிழா நிறைவடைகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வந்த கந்தசஷ்டி லட்சார்ச்சனை விழா, நேற்று புஷ்பாஞ்சலியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar