Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ... ஹரித்வாரில் ஒரு மாதமே கும்பமேளா திருவிழா ஹரித்வாரில் ஒரு மாதமே கும்பமேளா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் கைலாய காட்சியுடன் திருமாங்கல்யம்
எழுத்தின் அளவு:
சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் கைலாய காட்சியுடன் திருமாங்கல்யம்

பதிவு செய்த நாள்

26 மார்
2021
10:03

திருப்பூர் :சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், அம்மையப்பரின் கைலாய காட்சியுடன், திருமாங்கல்யம் உள்ளிட்ட பொருட்கள் வைத்து நேற்று வழிபாடு நடந்தது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் - சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டவர் உத்தரவு பெட்டி வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள், சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தரின் கனவில் வரும் கூறும் பொருட்களை, கோவிலில் உத்தரவு பெற்று, பெட்டியில் வைக்கப்படுகிறது. ஜன., மாதத்தில் இருந்து, நிறைநாழியில் மக்காச்சோளம் வைத்து பூஜை நடந்து வந்தது. தற்போது, முத்துாரை சேர்ந்த கோகுல்ராஜா என்பவர் கனவில் வந்த பொருட்களை, சிவன்மலை ஆண்டவரிடம் உத்தரவு பெற்று, பெட்டியில் வைத்து, சிறப்பு பூஜை நடந்தது.

உத்தரவு பெட்டியில், முருகன் மற்றும் விநாயகருடன், அம்மையப்பர் திருக்கல்யாண கோலத்தில் காட்சியளிக்கும் திருக்கைலாய காட்சி, தெய்வாம்சம் பொருந்திய அகத்தியரின் ஜாதகம், அகோர வீரபத்ரர், ஒரு திருமாங்கல்யம் மற்றும், 32 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை வைத்து, வழிபாடு நடத்தப்படுகிறது. சிவன்மலை கோவில், சிவாச்சார்யார்கள் கூறுகையில், உத்தரவு பெட்டியில், திருமாங்கல்யம் உள்ளிட்ட, மங்களகரமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தடைபட்டிருந்த திருமணங்கள் நடக்கும். கைலாய காட்சியுடன் கூடிய அம்மையப்பர் படம் வைக்கப்பட்டுள்ளதால், உலகத்தில் ஒற்றுமையும், அமைதியும் மேம்படும். நாணயங்கள் இடம் பெற்றதால், பொருளாதாரமும் வளம்பெறும். மொத்தத்தில், மங்களகரமாக இருக்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar