மெழுகுவர்த்தி தீபம் ஏற்றுகிறார்களே, எண்ணெய் தீபம் தான் ஏற்ற வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2012 03:06
எண்ணெய் தீபம் ஏற்றுவது தான் சிறப்புடையது. மனதில் இருக்கும் தீய சிந்தனைகள் எனும் இருளை நீக்கி நல்லறிவு எனும் ஒளிபெறச் செய்வது இவ்விளக்கு. எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றுபவர்களை தெய்வம் என்றும் பிரியாமல் இருந்து அருள்பாலிக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. விளக்கிட்டார் பேசு சொல்லின் மெய்ஞ்நெறி ஞானம் ஆகும் என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். விளக்கேற்றினால் நல்லறிவு கிட்டும் என்பது இதன் பொருள்.