Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் இரவில் ஜொலித்த மின் ... வேளாங்கண்ணியில் புனித வெள்ளி வழிபாடு வேளாங்கண்ணியில் புனித வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டியலின, பழங்குடி மக்கள் திருமலையில் ஆனந்த கண்ணீர்
எழுத்தின் அளவு:
பட்டியலின, பழங்குடி மக்கள் திருமலையில் ஆனந்த கண்ணீர்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2021
01:04

 திருப்பதி:தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மத மாற்றம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களிடையே ஹிந்து தர்மம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், விசாகா ஸ்ரீ சாரதா உத்தர பீடாதிபதி ஸ்ரீ ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள், 33 ஆயிரம் கி.மீ., தர்ம பிரசார யாத்திரை மேற்கொண்டார்.

விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி, ஸ்ரீ ஸ்வரூபானானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழி காட்டுதல்படி, விசாகப்பட்டினத்தில் இருந்து, 2019ல் இந்த யாத்திரையை துவங்கிய ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கிராமம் கிராமமாக நடந்தே சென்று, பட்டியலின, பழங்குடியின மக்களிடையே ஹிந்து தர்மம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அங்குள்ள புராதன, பிரபல கோவில்களுக்கு பட்டியலின, பழங்குடியின மக்களை உடன் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தார்.33 ஆயிரம் கி.மீ.,இப்படி, 33 ஆயிரம் கி.மீ., துாரம் நடந்தே யாத்திரை மேற்கொண்ட அவர், யாத்திரையின் நிறைவாக திருமலை திருப்பதிக்கு நேற்று முன்தினம் வந்தார்.அவருடன் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் குக்கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக நடந்து வந்த 1,200 பழங்குடியின, பட்டியலின மக்களும், திருமலை வந்தனர்.

பாதயாத்திரை வந்தவர்களை திருமலை தேவஸ்தான அதிகாரிகளும், வேதவிற்பன்னர்களும் வரவேற்று அழைத்துச் சென்றனர். அவர்கள், தனி வரிசையில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.அதன்பின், திருமலையில் உள்ள நட நிரஞ்சனம் அரங்கில், பக்தர்களோடு சேர்ந்து பஜன் மற்றும் நாம சங்கீர்த்தனம் செய்த சுவாமிகள், திருமலை தேவஸ்தானம் ஏற்பாடு செய்து கொடுத்த, பகவத் கீதை புத்தகத்தை, யாத்திரையில் உடன் வந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கினார்.

ஆனந்த கண்ணீர்: புனித யாத்திரை குறித்து ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:என்னுடன் பல மாதங்கள் நடைபயணமாக யாத்திரையாக வந்த பட்டியலின, பழங்குடியின மக்கள், ஏழுமலையானை தரிசித்தபோது, அவர்கள் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்ததை பார்த்தபோது மெய்சிலிர்த்து போனேன். இவர்கள் ஹிந்து தர்மத்தை கைவிடாமல் கடைப்பிடிப்பதோடு, இரண்டு மடங்கு உற்சாகத்துடன் ஹிந்து தர்மத்தை பரப்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.பாஸ் இன்ட்ரஸ்ட் / பட்டியலின, பழங்குடி மக்கள்நடைபயணமாக யாத்திரையில் உடன் வந்த பட்டியலின, பழங்குடியின மக்களுடன், திருமலை ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், செய்தியாளர்களிடம் பேசுகிறார், விசாகா ஸ்ரீ சாரதா உத்தர பீடாதிபதி ஸ்ரீ ஸ்வத்மானானேந்தர சரஸ்வதி சுவாமிகள்.ஆந்திரா, தெலுங்கானாவில் மத மாற்றம் தடுக்க33 ஆயிரம் கி.மீ., யாத்திரை சென்ற சங்கராச்சாரியார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar