பதிவு செய்த நாள்
09
ஜூன்
2012
10:06
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பழமையான புத்துமாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு செல்வ வினாயகர், பாலமுருகன், நாகசக்தி கன்னி, நவக்கிரகங்களுடன் கூடிய புத்துமாரி அம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடக்கிறது. அதையொட்டி இன்று (9ம் தேதி) யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. மறுநாள் 10ம் தேதி காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜை, புதிய சிலைகள் பிம்பஸ்தாபனம், மகா பூர்ணாஹுதி, மாலை 6 மணிக்கு மூன்றாம்கால யாகசாலை பூஜை, பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, சுமங்கலி பூஜை, மூலமந்திர பூஜை, ஜபஹோமம், தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேக தினமான 11ம் தேதி காலை 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தொடர்ந்து கடம் புறப்பாடாகி 6 மணிக்குமேல் 7 மணிக்குள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.