Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருட வாகனம் கண் திறப்பு வைபவம் சந்தான கோபால சுவாமி கோயிலில் ராம நவமி வழிபாடு சந்தான கோபால சுவாமி கோயிலில் ராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டு தலங்களில் மேலும் கட்டுப்பாடு: அரசு ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
05:04

 சென்னை :தமிழகத்தில், வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர், நேற்று அனைத்து மதத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கும்பாபிஷேகம்: நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில், இரவு, 10:00 மணி வரை, வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதில், மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, அனைத்து மதத் தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

தலைமை செயலர் ராஜிவ்ரஞ்சன் தலைமையில் நடந்த கூட்டத்தில், டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை செயலர் செந்தில்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஹிந்து, கிறிஸ்துவ, முஸ்லிம், ஜெயின், சீக்கிய மதத் தலைவர்களும் பங்கேற்றனர். கிறிஸ்துவ மதத் தலைவர்கள் பேசுகையில், ’ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம், பிரார்த்தனை கூட்டம் நடத்த, அனுமதி அளிக்க வேண்டும்’ என்றனர்.முஸ்லிம் மதத் தலைவர்கள், ’ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை, மே, 9 ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று ஊரடங்கு தளர்வு அளிக்க வேண்டும்’ என,
வலியுறுத்தி உள்ளனர்.

ஒத்துழைப்பு: ஒட்டுமொத்தமாக, அனைத்து மதத் தலைவர்களும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசு சில கட்டுப்பாடுகளை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூட்டம் குறித்து, இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் கூறியதாவது:அரசு விதிக்கும் நடைமுறைகளுக்கு, முஸ்லிம் சமுதாயம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என, உறுதி அளித்து உள்ளோம். ரமலான் பண்டிகைக்கான சிறப்பு தொழுகை, ஞாயிற்றுக்கிழமை வருவதால், அரசு அனுமதி அளித்தால், அன்று தொழுகை நடத்துவோம். இல்லையேல், ஒரு நாள் முன், பின் நடத்துவது குறித்து, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு; லிங்கராஜபுரம் பகுதியில் கிராம தேவதை பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar