Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் சார்பில் கொரோனா ... அண்ணாமலையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை அண்ணாமலையார் கோயிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபிலர் குன்றை சுற்றி இந்த முள் மரங்கள் அகற்றம்
எழுத்தின் அளவு:
கபிலர் குன்றை சுற்றி இந்த முள் மரங்கள் அகற்றம்

பதிவு செய்த நாள்

29 மே
2021
05:05

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கபிலர் குன்றை சுற்றியிருந்த முள்மரங்கள் பொதுப்பணித்துறை மூலம் அகற்றப்பட்டது.

பாரியின் உற்ற நண்பன் கபிலன். சங்க இலக்கியங்களில் அதிக பாடல்களை பாடியவர். நட்பிற்கு அடையாளமானவர். பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவிலூர் அழைத்துவந்து மணமுடித்து வைத்துவிட்டு தென்பெண்ணை ஆற்றில் இருக்கும் குன்றின்மீது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு. இதற்கான ஆதார கல்வெட்டுகளும் இதன் அருகில் இருக்கும் வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறை சுவற்றில் உள்ளது. கபிலர் உயிர் நீத்த குன்றின்மீது அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒரு நினைவகம் உள்ளது. கபிலர்குன்று என அழைக்கப்படும் இதுதான் திருக்கோவிலூரில் அடையாளமாகவும் உள்ளது.

தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் குன்றை சுற்றி முள் மரங்கள் வளர்ந்து, கபிலர் குன்றை மறைக்கும் அளவிற்கு இருந்தது. இதனால் இப்பகுதியில் சமூக விரோத செயல்களும் அரங்கேறி வந்தது. இந்த முள்மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் ஏற்பாட்டில், தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் முருகன், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் குணா ஆகியோர் மேற்பார்வையில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் பாலாஜி ஆகியோர் முன்னின்று ஜே.சி.பி., மூலம் குன்றை சுற்றி இருந்த முள்மரங்கள் அனைத்தையும் வேருடன் பிடுங்கி அப்புறப்படுத்தினர். மேலும் வீரட்டானேஸ்வரர் கோவில் படித்துறையில் இருந்த முள் மரங்களும் அகற்றப்பட்டது. இங்குதான் கபிலருக்கு நினைவு தூனும் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருக்கோவிலூரில் அடையாளமாக இருந்த கபிலர் குன்று வெகு தூரத்திலிருந்து அனைவரும் காணும் வகையில் காட்சியளிக்கிறது. சீரமைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar