Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ... கிராமக் கோவில் அர்ச்சகர்களுக்கு உதவி கிராமக் கோவில் அர்ச்சகர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடவுள் எங்களை கொரோனா வராமல் காப்பார்! தடுப்பூசி போட முரண்டு பிடிக்கும் கிராமத்தினர்
எழுத்தின் அளவு:
கடவுள் எங்களை கொரோனா வராமல் காப்பார்! தடுப்பூசி போட முரண்டு பிடிக்கும் கிராமத்தினர்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2021
05:06

கதக் : கடவுள் மீதுள்ள ஆழமான பக்தியால், கதக்கின் ராவல் மல்லிக் கிராமத்தினர், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுக்கின்றனர்.

கதக் நகர் முளகுந்தின் தாவல் மல்லிக் கிராம மக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட, சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆனால் கிராமத்தினருக்கு, தடுப்பூசி மீது நம்பிக்கையில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால், இறந்து விடுவோம் என, அஞ்சுகின்றனர். சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் கிராமத்துக்கு வந்து, கொரோனா தடுப்பூசி பற்றி சந்தேகம் வேண்டாம். தைரியமாக தடுப்பூசி பெறுங்கள். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என மன்றாடியும் கிராமத்தினர் மறுக்கின்றனர். அதிகாரிகள் இதுவரை மூன்று முறை, கிராமத்துக்கு சென்றும், யாரும் தடுப்பூசி பெற முன்வரவில்லை.

தடுப்பூசி பெற்றால், இறந்துவிடுவர் என பீதி உள்ளது. எங்களுடன் கடவுள் இருக்கிறார். எங்களுக்கு ஒன்றும் ஆகாது. எங்கள் கிராமத்துக்குள், கொரோனா நுழையாது. ஒருவேளை நுழைந்தாலும், சாகடிக்க முடியாது. கடவுள் எங்களை காப்பாற்றுவார். தடுப்பூசி தேவையில்லை என முரண்டு பிடிக்கின்றனர். அதேபோன்று வியாபாரிகளும் கூட, 25 ஆயிரம் ரூபாய் பாண்ட் பத்திரத்தில், எழுதித்தாருங்கள். தடுப்பூசி பெறுகிறோம் என, பிடிவாதம் பிடிக்கின்றனர். கிராமத்தினருக்கும், வியாபாரிகளுக்கும் தடுப்பூசி போடுவது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. முளகுந்த் ஆரம்ப சுகாதார மையத்தின், மருத்துவ அதிகாரி கூறுகையில், கிராமப் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஆனால், ராவல் மல்லிக் கிராமத்தினர் மட்டும், தடுப்பூசி பெற முன்வரவில்லை. அவர்களுக்கு தடுப்பூசி பற்றிய தவறான கற்பனை உள்ளது. விரைவில் இவர்களின் மனதை மாற்றுவோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar