Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுஷ்கோடி ராமர் கோவிலில் முள் ... ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் நிலங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பணியாளர்கள் நிரந்தரம்: அறநிலைய துறை அமைச்சர் உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2021
06:07

திருச்சி: கோவில்களில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை, ஒரு மாதத்துக்குள் நிரந்தரமாக்குவோம், என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று ஆய்வு நடத்திய பின், அவர் அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில், கோவில்களில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த பணியாளர்களை நிரந்தரமாக்கி, காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என, சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தனர். போகிற போக்கில் அறிவித்து, செயல்படுத்தாமல் விட்டுச் சென்ற அந்த அறிவிப்பை, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்களை, ஒரு மாதத்துக்குள் நிரந்தரமாக்குவோம். கருணை அடிப்படையிலான பணிக்கு காத்திருப்பவர்களை, பணி நியமனம் செய்யவும், ஓய்வூதியம் கோருபவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, 1866ம் ஆண்டு, 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே உள்ளது. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள், கோவில் நிர்வாகத்துக்கு மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கொரோனா மூன்றாவது அலை வரும் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால் கோவில்களில் அன்னதானம் வழங்குவதை தவிர்த்து, பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar