Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் 25ல் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2012
11:06

மோகனூர்: வாழவந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, வரும் 25ம் தேதி குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. மோகனூர் யூனியன், எஸ்.வாழவந்தியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் உள்ள பழமைவாய்ந்த தேர் பழுதடைந்ததால், பல லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் அமைக்கப்பட்டது. அதன் வெள்ளோட்டம் கடந்த 31ம் தேதி நடந்தது. தொடர்ந்து, கடந்த 14ம் தேதி தேர்த்திருவிழாவுக்காக, கம்பம் நட்டு காப்பு கட்டப்பட்டது. அதையடுத்து, தினமும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். வரும் 24ம் தேதி இரவு தேர் திருவிழாவும், தொடர்ந்து, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்படுகிறது. 25ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜையும், தீக்குண்ட பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் உருளுதண்டம், அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். மதியம் 1 மணிக்கு கொமராபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி, ஊர்வலமாக வந்து கோவில் முன், குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஜூன் 26ம் தேதி காலை 6 மணிக்கு கிடா வெட்டும், இரவு 7 மணிக்கு ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 27ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar