Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தொட்டிச்சி அம்மன் கோயிலில் கருட ... சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம் சிதம்பரம் நடராஜர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல் நல்லடக்கம்
எழுத்தின் அளவு:
மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல் நல்லடக்கம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2021
05:08

மதுரை: உடல் நலக்குறைவால் முக்தியடைந்த மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல், மடத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய மடங்களில் ஒன்று மதுரை ஆதின மடம். 1500 ஆண்டுகளுக்கு முன் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இம்மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரி நாதர் இருந்தார். பத்திரிகையாளரான இவர், 1975ல் இளைய ஆதினமாக பொறுப்பேற்றார். 1980ல் மூத்த ஆதினம் சோமசுந்தர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் இறந்ததை தொடர்ந்து மடத்தின் பொறுப்பை ஏற்றார். இதன்பின் அரசியல்வாதிகள், பிரபலங்களுடன் தொடர்பு ஏற்பட்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் 2012ல் இளைய ஆதினமாக நித்யானந்தாவை நியமித்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் அவரை நீக்கிவிட்டு, 2019ல் தருமபுரம் ஆதினத்தின் மூத்த தம்பிரானான சுந்தரமூர்த்தியை இளைய ஆதினமாக அறிவித்தார்.

சில ஆண்டுகளாக மூச்சுத்திணறால் அவதிப்பட்டவர், ஒருவாரத்திற்கு முன் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருநாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு முக்தியடைந்தார். உடல் ஆதின மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, மதுரை கலெக்டர் அனீஸ் சேகர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பொது மக்கள், பல அமைப்பினர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அவரது உடலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவை காமாட்சிபுரி, குன்றக்குடி, தருமபுரம் திருவாவாடுதுறை ஆதினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். தொடர்ந்து தொன்மை வாய்ந்த பூப்பல்லக்கில் அவரது உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதி முன்சென்றது. மதுரை முனிச்சாலையில் மடத்திற்கு சொந்தமான இடத்தில் , மதுரை ஆதினம் ஞானசம்பந்த அருணகிரிநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை குறைக்க ரூ.ஒரு லட்சம் செலவில் 1000 அடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar