Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி ... விநாயகர் ஊர்வலம் தடுத்தால் போராட்டம் வெடிக்கும்:. ஹிந்து முன்னணி எச்சரிக்கை விநாயகர் ஊர்வலம் தடுத்தால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்ச்சகர்கள் நியமனம்; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்
எழுத்தின் அளவு:
அர்ச்சகர்கள் நியமனம்; ஐகோர்ட்டில் அரசு விளக்கம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2021
02:08

 சென்னை-முறையாக பயிற்சி பெற்றவர்களே, கோவில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகின்றனர் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.

தமிழகம் முழுதும், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக, விண்ணப்பங்களை வரவேற்று, அறநிலையத் துறை விளம்பரம் வெளியிட்டு உள்ளது. அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக்கோரி, சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச் செயலர் பி.எஸ்.ஆர்.முத்துகுமார் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.அந்த மனுவில், ஆகம விதிகளை பின்பற்றியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இந்த விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது. ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை நியமிப்பது தவறானது என, கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை குறித்தும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட 15 அர்ச்சகர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்தும், நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர், தமிழகத்தில் ஆறு அங்கீகாரம் பெற்ற அர்ச்சகர்கள் பயிற்சி மையங்கள் இருப்பதாகவும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களில் சிலர், அங்கீகாரம் பெற்ற மையங்களில் பயிற்சி பெறாவிட்டாலும், மூத்த பட்டாச்சாரியார்களிடம் முறையாக பயின்றவர்கள் என்றும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, இதேபோன்ற வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.அதை ஏற்ற, நீதிபதி அனிதா சுமந்த், வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழாவில் 8ம் நாளான இன்று மதியம் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லுரில் புகழ் பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; பூங்கா நகர், தங்க சாலை தெருவில் உள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் மஹா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar