Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மத்துப்பட்டி கோயிலுக்கு புதிய ... முத்தைய சுவாமி கோவிலில் நாளை மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் கோவில் இடிப்பு சம்பவம் காமாட்சிபுரம் ஆதீனம் கடும் கண்டனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2021
03:08

பல்லடம்: சிதம்பரம் கோவில் இடிப்பு சம்பவம் குறித்து, கோவை காமாட்சிபுரம் ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிதம்பரம், சீர்காழி ரோட்டில், வீரனார் கோவில் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி, வருவாய் துறையினர் நேற்று முன்தினம் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கோவில் அமைந்துள்ள இடம் மவுன மடத்திற்கு சொந்தமானது என்று கூறி, கோவிலை இடித்து அகற்றிய வை கண்டித்து, மடத்தை சேர்ந்த மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் போராட்டத்தில் ஈடுபட்டார். இச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் கண்டனம் கூறியதாவது: தமிழகத்தில் தொடர்ச்சியாக கோவில் இடிப்பு சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. சிதம்பரத்தில், கோவிலை பாதுகாக்க சுந்தரமூர்த்தி சுவாமிகள் நடுரோட்டில் நின்று தர்ணாவில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது. இச்சம்பவத்தை, சிவனடியார்கள், ஆதீனங்கள், திருமட தலைவர்கள் உள்ளிட்டோர் ஒரு போதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கோவில் நிலம் அரசுக்கு தேவையென்றால், அதை உரியவர்களிடம் பேசி முடித்து, சம்மதம் பெற்ற பிறகே பணிகளை துவங்க வேண்டும். கோவிலை இடிக்க வேண்டும் என்றால், அதற்கான சாஸ்திர சம்பிரதாயங்கள், ஆகம விதிகளைப் பின்பற்றியே மேற்கொள்ள வேண்டும். இது எதையும் பின்பற்றாமல், கால் போன போக்கில் கோவில்கள் இடிக்கப்படுகின்றன. மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் ரோட்டில் இறங்கி போராடும் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. எனவே, அவரது கோரிக்கையை ஏற்று இது குறித்து விசாரணை மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். ஆதீனங்கள் சார்பில் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை பதிவிடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar