வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு நேற்று புதிதாக ஐம்பொன்னாலான உற்சவர் சிலை ஸ்தாபன விழா நடந்தது. கணபதி பூஜை, வேள்வி பூஜை கேள்விகளைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை உற்சவர் புறப்பாடாகி வளாகத்துக்கு வந்தார். விழா ஏற்பாட்டினை பழநியாண்டவர் பாதயாத்திரை குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.