Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேணுகோபாலசுவாமி கோவிலில் 30ல் ... பிளேக் மாரியம்மன் கோவில் ஆண்டு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கும்பாபிஷேகம் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2021
03:08

மதுரை:திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக தேதியை நிர்ணயிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்செந்துாரைச் சேர்ந்த நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், அறுபடை வீடுகளில் ஒன்று.இங்கு, 2009 ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆகம விதிகள்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.இதன்படி, 2021ல் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கொரோனா ஊரடங்கால், அன்றாட பூஜைகள் நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது, கொரோனா தடுப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழிபாடு, பூஜைக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்திற்கு முன், சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலை புனரமைத்து, வண்ணம் தீட்ட 18 மாதங்கள் ஆகும். புனரமைப்புப் பணியை மேற்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும். கும்பாபிஷேகத்திற்கான தேதியை நிர்ணயிக்க கோரி, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டுஉள்ளார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, அரசு குழு அமைத்து பரிசீலித்து வருகிறது என தெரிவித்தது. நீதிபதிகள், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர், திருச்செந்துார் கோவில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆறு வாரங்கள் ஒத்தி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar