Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரக்குளத்தில் பாண்டியர் கால ... வாரம் முழுவதும் வழிபாட்டுக்கு அனுமதி: சுவாமிமலையில் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் வாரம் முழுவதும் வழிபாட்டுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிக்கிழமைகளில் அரங்கநாதர் கோவிலை திறக்க அரசுக்கு; பா.ஜ., கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2021
03:09

மேட்டுப்பாளையம்: சனிக்கிழமைகளில், காரமடை அரங்கநாதர் கோவிலைத் திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில பா.ஜ., விவசாய அணி செயற்குழு உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்ட பெருமை வாய்ந்த கோயிலாகும். ராமானுஜர் மேலக்கோட்டை செல்லும்போது, இங்கு வந்து சென்றதாக வரலாறு கூறுகிறது. மேலும் காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்வது வழக்கம். சனிக்கிழமைகளில் கோவில் வளாகத்திலும், முன்பும் அமர்ந்திருக்கும் தாசர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை, தலைவாழை இலையில் படையலிட்டு கொடுப்பதை, பெருமாளுக்கு கொடுப்பதாக ஐதீகம். வாசகர்களிடமிருந்து பக்தர்கள் சிறிது பெற்று, தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, பொங்கலுக்கு விரதத்தை முடிப்பது வழக்கம். காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு இது சிறப்பாகும்.

மேலும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும், நவராத்திரி விழாவில், ஒன்பது நாட்கள் அரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பத்தாவது நாள் விஜயதசமி அன்று, அரங்கநாத பெருமாள், குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து, பரிவேட்டை மைதானத்தில் எழுந்தருளும், வைபவம் வெகு சிறப்பாக நடைபெறும். எனவே புரட்டாசி மாதத்தில் உள்ள சனிக்கிழமை நாட்களில், காரமடை அரங்கநாதர் கோவில்களை திறந்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar