சோழவந்தான்: சோழவந்தான் அருகே கொடிமங்கலம் சீதா லட்சுமி அம்மன் கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. அபிஷேக ஆராதனைக்குப்பின், பட்டுபுடவை, தங்க கிரீடம் செலுத்தப்பட்டு, புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.