Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்ச முகேஸ்வரர் பர்வதவர்த்தினி ... திருமலையில் கன்னட பவன் பணி முடிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
03:11

மேட்டுப்பாளையம்: ஜடையம்பாளையத்தியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையத்தில் புதிதாக வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் கட்டப்பட்டது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியது. மத்திய பிரதேசம் நர்மதா ஆற்றில் இருந்து, எடுத்து வரப்பட்ட, லிங்கத்தை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா, 14 ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவகிரக பூஜை, மகாலட்சுமி ஹோமம், கால பைரவர் ஹோமம், கோ பூஜை ஆகியவை நடந்தன. பின்பு கலச தீர்த்தம், முளைப்பாரி, வெள்ளிங்கிரி ஆண்டவர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். வழிபாட்டுடன், முதல் கால யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இரவில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜையும், வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு நாடி சந்தானம், மகாதீபாராதனை நடந்தது. பத்து மணிக்கு யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியம், நாதஸ்வரம் இசை முழங்க தீர்த்த குடங்களை, கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபரர் சாமி, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து அனைத்து சுவாமிகளுக்கும், புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி, ஊர் தலைவர் ரங்கசாமி, ஊர் கவுடர் பார்த்திபன், ஊராட்சி துணைத்தலைவர் மாரண்ணன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகசுந்தரம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஊர் கவுடர், பொதுமக்கள், வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar