Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரத்தியங்கிரா கோவிலில் 16 அடி உயர ... விருதுநகர் சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் விருதுநகர் சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு

பதிவு செய்த நாள்

07 டிச
2021
12:12

மேட்டுப்பாளையம்: மிகவும் பழமை வாய்ந்த, சுப்ரமணிய சுவாமி கோவில், திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு உள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில், பழைய நகராட்சி அலுவலகம் அருகில், பவானி ஆற்றின் கரையோரம், மிகவும் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்த மண்டபங்கள், சுவர்கள் இடியும் நிலையில் இருந்தது. அதனால், 2015 ம் ஆண்டு கோவில் இடிக்கப்பட்டு புதிதாக, திருப்பணிகள் துவங்கின. முருகர் மூலவர் சன்னதி, சிவன், அம்பாள், நவகிரக ஆகிய சன்னதிகளும், மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம், மணி மண்டபம், ராஜ கோபுரம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது. திருப்பணிகள் முடிந்து, ஒரு ஆண்டுக்கும் மேலாகியும், கும்பாபிஷேகம் நடைபெறாமல், உள்ளது. எப்போது கும்பாபிஷேகம் நடைபெறும் என, பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் ஹர்ஷினி கூறுகையில்," சுப்ரமணிய சுவாமி கோவிலில், அனைத்து திருப்பணிகளும் நடந்து முடிந்துள்ளன. புதிதாக கொடிமரம், தீபஸ்தம்பம் அமைக்க, வரைபடம் அனுமதிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கொடிமரமும், தீபஸ்தம்பம் அமைக்கப்படும். அதன் பின்பு கும்பாபிஷேகம் தேதி முடிவு செய்யப்படும்," என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar