Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... திருப்பரங்குன்றத்தில் நாளைய பவுர்ணமி கிரிவலம் ரத்து திருப்பரங்குன்றத்தில் நாளைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோளறு பதிகத்தின் படமும் விளக்கமும்... 96 வயது பெண் ஓவியர் பரவசம்!
எழுத்தின் அளவு:
கோளறு பதிகத்தின் படமும் விளக்கமும்... 96 வயது பெண் ஓவியர் பரவசம்!

பதிவு செய்த நாள்

17 டிச
2021
02:12

சென்னை: மார்கழி முதல் நாளான நேற்று, தினமலர் நாளிதழில் இடம் பெற்றிருந்த, திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகத்துக்கு, ஓவியர் பத்மவாசனின் ஓவியத்திற்கும், விளக்கத்திற்கும் வாசகர்களிடையே பலமான வரவேற்பு கிடைத்துள்ளது. தினமலர் வாசகர்களில் ஒருவரும், ஓவியருமான, 96 வயது பார்வதி பாட்டி, இது தன் வாழ்நாளில் வாசிக்கவும், பார்க்கவும் கிடைத்த பொக்கிஷம் என, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

திருஞான சம்பந்தர் மதுரை செல்ல இருந்த போது, அவரது பக்தர்கள், அப்போதைய கோள்களின் சூழ்நிலை சரியில்லை எனக்கூடு பயணத்தை ஒத்திப்போட கேட்டுக் கொண்டனர். ஆனால் “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை, நாளும் கோளும் என்ன செய்து விடும். அவை நன்மையே பயக்கும்,” என்று கூறி, திருஞான சம்பந்தர் பாடிய 11 பாடல்களின் தொகுப்பே, கோளறு பதிகமாகும். இந்தப் பதிகத்தைப் படித்தால், கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது, சைவ சமயத்தாருக்கு, ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.இன்றும் ஏதாவது முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன், இந்தப் பதிகத்தை முழுதாகவோ, முதல் பாடலை மட்டுமோ சொல்லி செல்லும் வழக்கம் பலரிடம் உண்டு.

இதனைப் பற்றி, முழு விளக்கத்துடன் அருமையான ஒவியத்துடன் வந்துள்ள கோளறு பதிகம் பற்றி, சென்னை, நங்கநல்லுாரில் வசிக்கும் 96 வயது பார்வதி பாட்டி கூறியதாவது:ஓவியம் சிறப்பாக வந்துள்ளது. விளக்கம் எளிமையாக உள்ளது. மீதமுள்ள பத்து பதிகத்தை படிக்கவும், அது பற்றிய ஓவியத்தைக் காணவும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நடமாட முடியாத பார்வதி பாட்டியின் ஒரே பொழுது போக்கு ஓவியம் வரைவதுதான். பென்சிலின் துணை கொண்டு, சாமி படங்கள் மட்டும் வரைவார்.இதுவரை, 3,௦௦௦த்திற்கும் அதிகமான ஓவியங்கள் வரைந்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar