Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ... திருப்பதியில் ஜனவரி மாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியது திருப்பதியில் ஜனவரி மாதத்திற்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி: நம்மாழ்வாருக்கு மோட்சம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தீர்த்தவாரி: நம்மாழ்வாருக்கு மோட்சம்

பதிவு செய்த நாள்

24 டிச
2021
11:12

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ராப்பத்து உற்ஸவம் நிறைவு நாளான நேற்று சந்திரபுஷ்கரணியில் தீர்த்த பேரர் தீர்த்தவாரி கண்டருளினார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து உற்ஸவமும் 14ம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பும் நடைபெற்றது. தொடர்ந்து ராப்பத்து உற்ஸவ நாட்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ராப்பத்து உற்ஸவத்தின் நிறைவு நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டையுடன் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தடைந்தார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நம் பெருமாள் முன்னிலையில் தீர்த்த பேரர் சந்திர புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். தீர்த்தவாரிக்கு பின் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இரவு 8 மணி வரை திரளான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar