Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் ஆவின் நெய், வெண்ணெய் ... ஆஸ்தீக சமாஜத்தில் ரிக் வேத சம்பூர்ண ஜடா பாராயணம் ஆஸ்தீக சமாஜத்தில் ரிக் வேத சம்பூர்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமி ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ஞானபுரீ ஆஞ்சநேயர் கோவிலில் கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமி ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

25 டிச
2021
12:12

திருவாரூர் : ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானத்தின் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், இடதுபுறம் ஸ்ரீ கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமிகள் எழுந்தருளியுள்ளனர்.

இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள 33அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயர் இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி   மூலிகைகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி, மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நேற்று ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஷகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யாபினவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி தொடங்கி நேற்று வரை சத சண்டி யாகம் நடத்தப்பட்டு காலை 11 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை  நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து விஸ்வரூப ஆஞ்சநேயர் லட்சுமி நரசிம்மர் கோதண்ட ராமர் சீதாதேவி லட்சுமணர் பக்த ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.  தொடர்ந்து மகா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரசாதங்களை சிவாச்சாரியார்கள் மகா சுவாமிகளிடம் வழங்கினர். தொடர்ந்து குரு மூர்த்தி தலைமையில் திருவோணமங்கலம் கிராம மக்கள் வரிசை எடுத்து வந்து மகா சுவாமிகளை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஆஞ்சநேய பகவானையும், மகா சுவாமிகளையும் தரிசனம் செய்து குருவருளையும், திருவருளையும் பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி  ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம்  சந்திரமௌலீஸ்வரர் ஆகியோர் தலைமையில் கோவில் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து ஞானபுரீ ஸ்ரீ சித்திர கூட சேத்திரம் சங்கடஹர ஸ்ரீ மங்கல மாருதி ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில்   மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய  ஜனவரி 2ம் தேதி ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மகோத்சவம் நடைபெற உள்ளது. ஹனுமன் ஜெயந்தி மகோற்சவத்தை முன்னிட்டு இன்று 26ம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ருத்ர ஹோமம் நடைபெறுகிறது.   அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஜனவரி 1, 2 ஆம் தேதிகளில் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar