Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரவளி மாதப்பூர் ஆஞ்சநேயருக்கு ஜன., 2 ... நள்ளிரவு கோயிலை திறந்தால் முற்றுகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடியவர் சேவையை உபதேசத்தால் விவரிக்க முடியாது ;ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2021
03:12

புதுச்சேரி-அடியவர் சேவையை, உபதேசத்தால் விவரிக்க முடியாது என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்தார்.

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி கடந்த 16ம் தேதி முதல் திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு துவங்கியது.ஜனவரி 12ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை ஓய்வு பெற்ற நீதிபதி ராம பத்ரன் சொற்பொழிவாற்றுகிறார். நேற்றைய சொற்பொழிவில் அவர் உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையின் 15வது பாசுரம், கோபியரை துயிலெழுப்பும் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களில் இது கடைசி பாசுரமாகும்.இந்த பாசுரத்தை திருப்பாவையின் திருப்பாவை என்று போற்றுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், பாசுரத்தில் உள்ள நானே தான் ஆயிடுக என்ற சொற்கள் உணர்த்தும் ஆழ்ந்த தத்துவம். இதற்கு ஆழ்ந்த உட்பொருளும் உள்ளது.எளிமையாக சொன்னால், இல்லாத குற்றத்தை பொய்யாக ஒருவர் நம் மீது சுமத்தும்போது கூட, அதை மறுக்காமல் நமது குற்றமென்று இசைவதே ஒரு வைணவனின் குணமாகும் என்று உணர்த்தப்படுகிறது.இந்த பாசுரம் உணர்த்தும் அடியவர் சேவை என்பது, உபதேசத்தால் விவரிக்க முடியாதது. அதை கடைபிடிப்பவர்களாலேயே உணர முடியும். அதனால் தான் பாசுரத்தை, அடியவர் சேவை பற்றிய அறிவுரையாக கூறாமல், சம்பாஷணை வடிவில் சொல்லி, அடியவர் சேவையின் சிறப்பினை ஆண்டாள் குறிப்பில் உணர்த்தி உள்ளார்.அடியார்க்கு அடியாராக இருப்பதில் உள்ள பெருஞ்சிறப்பை, நம்மாழ்வார் அவருக்கே உரித்தான பக்தியோடு அருளியுள்ள பாசுரங்களில் ஒன்றில், அடியார் என்பதை ஏழு முறை சொல்லியுள்ளது, சப்த பர்வ தாஸ்யத்வம் எனப்படுகிறது.அதாவது, ஏழு பிறப்புகளிலும் வைணவ அடியார்களுக்கு தொண்டு செய்யும் பாக்கியத்தை வரமாக பரமனிடம் பெற வேண்டும் என்பது இதனுடைய உள்ளுறை பொருள்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar