Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னுாரில் நாகம்மன் திருவிழா ... பாலக்காடு சாஸ்தா கோயிலில் மகரவிளக்கு உற்சவம் பாலக்காடு சாஸ்தா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்!

பதிவு செய்த நாள்

14 ஜன
2022
03:01

சபரிமலை : சபரிமலையில் இன்று (ஜன.,14) மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. மகர சங்கராந்தி பூஜை இன்று மதியம் நடக்கிறது.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை சரங்குத்தி வந்தடையும். இங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின் சன்னிதானத்துக்கு எடுத்து வரப்படும். மாலை 6:25க்கு 18ம் படி வழியாக சன்னதிக்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை பெற்றுக்கொள்வர். பின் நடை அடைத்து விக்ரகத்தில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடக்கும். தீபாராதனை முடிந்து சில வினாடிகளில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தரும். தொடர்ந்து மகர ஜோதி மூன்று முறை காட்சி தரும்.

மகரஜோதி நாளில் நடக்கும் முக்கிய பூஜைகளில் ஒன்று மகர சங்கராந்தி பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்லும் நேரத்தில் அய்யப்பனுக்கு இந்த பூஜை நடத்தப்படுகிறது. இன்று மதியம் 2:29 மணிக்கு இந்த பூஜை நடக்கிறது. இந்த நேரத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும்.

ஹரிவராசனம் விருது: திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது கேரளாவைச் சேர்ந்த ரங்கநாதனுக்கு வழங்கப்படும். புல்மேடு பாதையை திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த மூன்று நாட்களில் பக்தர்களின் வருகை குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar